இலங்கைக்கு மீண்டும் தமிழக நிவாரண பொருட்கள்

இலங்கையில் போரால் பாதிக்கப்பட்ட தமிழர்களின் குடும்பங்களுக்காக கடந்த அக்டோபர் மாதம் தமிழக அரசு நிதி திரட்டியது. 50.53 கோடி ரூபாய் நிதி திரண்டது. அந்த நிதியில் இருந்து பத்து கோடியே 7 லட்சம் நிதி மத்திய அரசின் உதவியோடு நிவாரண பொருட்கள் வாங்கப்பட்டு இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

தற்போது இலங்கையில் பாதிப்புக்குள்ளாகி இருக்கும் 40 ஆயிரம் குடும்பங்களுக்கு உடனடியாக சமையல் பாத்திரங்கள் தேவைப்படுவதாக தகவல் வந்ததை அடுத்து அந்த பார்த்திரங்களை அனுப்பி வைக்க முதல்வர் கருணாநிதி உத்தரவிட்ட்டிருந்தார்.

அரிசி, பருப்பு டீ.தூள், சர்க்கரை போன்ற உணவு பொருட்களுடன் சோப்பு, பற்பசை,சமையல் செய்ய எவர்சில்வர் பாத்திரங்கல் நாற்பதாயிரம் குடும்பங்களுக்கு அனுப்பபட இருக்கின்றன.இந்த பாத்திரங்களை கருணாநிதி பார்வையிட்டார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக