"சலித்துப் போய்விட்டேன்" காந்தி கண்ணதாசனுக்கு கருணாநிதி கடிதம்

கண்ணதாசனின் நூல்களை நாட்டுடமை ஆக்கப்படும் என தமிழக அரசின் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டதுமே கொதித்துப்போய் அறிக்கைவிட்டார் காந்தி கண்ணதாசன். இதனால் அந்த அறிவிப்பை வாபஸ் வாங்கியது தமிழக அரசு. இந்த நிலையில் காந்தி கண்ணதாசனுக்கு மருத்துவமனையில் இருந்து கடிதம் எழுதியிருக்கிறார் முதல்வர் கருணாநிதி.

அன்புள்ள தம்பி காந்தி கண்ணதாசனுக்கு,

காந்தியின் பெயரையும் வைத்துக்கொண்டு என்னுடைய அருமை நண்பர் கண்ணதாசன் பெயரையும் வைத்துக் கொண்டு ஏடுகளில் இப்படியொரு அறிக்கை விடுவாய் என்று நான் கருதவில்லை. கண்ணதாசன் நூல்களை நாட்டுடமை ஆக்குவது என்று அரசாங்கம் அறிவித்தது. அந்த கவிஞனை பெருமைப்படுத்த வேண்டும் என்பதற்காக நான் என் நண்பன் பால் கொண்ட அன்பின் காரணமாக செய்யப்பட்டது. நேற்று அரசு அறிக்கையில் குறிப்பிட்டதுப் போல ஏற்றுக் கொள்வது, ஏற்றுக்கொள்ள விருப்பம் இல்லாவிட்டால் அதை அரசுக்கு தெரிவிப்பதும் பல முறை நடந்த நிகழ்ச்சிகள். கண்ணதாசனை மதிக்கும் பலர் அறிவிப்பை கேள்விபட்டு தொலைபேசி மூலம் நன்றி தெரிவித்தார்கள். வைரமுத்துவும் என் உதவியாளரிடம் தொலைப்பேசி மூலம் நன்றி தெரிவித்தார்.

கண்ணதாசன் என்ற கவிஞனை மதிப்பதற்காக அரசின் சார்பில் செய்யப்பட்ட செயல் அது. அதற்காக இப்படியொரு அறிக்கை அந்த குடும்பத்தின் சார்பில் வெளிவரும் என்று எதிர்பார்க்கவில்லை. உன்னுடைய அறிக்கைக்கு முரசொலியில் சின்னக்குத்தூசி விரிவாக பதில் எழுதியுள்ளார். எழுத்தாளர்களுக்கும் பதிப்பகத்தாருக்கும் என் சொந்தப் பொறுப்பில் ஒரு கோடி ரூபாய் அளித்த போது அந்த சங்கத்திற்கு நீ தலைவராய் இருக்கிறாய், அந்தச் செயல் முறையாக நடைபெறும் என்ற நம்பிக்கை எனக்கு இப்போதும் உண்டு. ஆனால் கண்ணதாசன் நூலினை நாட்டுடைமையாக்கியது குறித்து இப்படி நீ நடந்து கொண்ட முறையைக் கண்டு சலித்துப் போய் விட்டேன்.
அன்புள்ள மு.கருணாநிதி

1 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

Hi

உங்கள் வலைப்பதிவை வலைப்பூக்களில் பதித்ததற்கு நன்றி. அதன் இணைப்பை இங்கு பார்க்கவும். வேகமாக வளர்ந்து வரும் தமிழ் இனத்தின் இணையத்திலும் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.

நட்புடன்
வலைப்பூக்கள்‌/தமிழ்ஜங்ஷன் குழுவிநர்

கருத்துரையிடுக