ஜெயலலிதா வைகோ சந்திப்பு

திருமங்கலம் இடைத் தேர்தல் பிரச்சாரத்திற்காக மதுரை சென்றிருக்கும் ஜெயலலிதாவை இன்று (டிசம்பர் 4) பிற்பகல்,மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் வைகோ நேரில் சந்தித்தார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில துணைச் செயலாளர் சி.மகேந்திரன், மதுரை மாவட்டச் செயலாளர் காளிதாஸ், சிவகங்கை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் குணசேகரன், ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் டி. ராமசாமி ஆகியோரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை மாவட்டச் செயலாளர் சுந்தரம், மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் மோகன், மதுரை கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் நன்மாறன், இந்திய தேசிய லீக் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் இனாயத்துல்லா, இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் மாநிலச் செயலாளர் தாவூது மியாகான், மூவேந்தர் முன்னேற்றக் கழகத் தலைவர் ஸ்ரீதர் வாண்டையார், அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழகத்தின் பொதுச் செயலாளர் இசக்கிமுத்து, தமிழ் நாடு முத்தரையர் முன்னேற்ற சங்கத்தின் தலைவர் விஸ்வநாதன், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் திண்டிவனம் ராமமூர்த்தி, இந்திய உழவர் உழைப்பாளர் கட்சியின் மாநிலத் தலைவர் வேட்டவலம் மணிகண்டன், தேசிய லீக் கட்சியின் தலைவர் பஷீர் அகமது, தமிழ் நாடு அகமுடையார் பேரவையின் தலைவர் சந்திரசேகரன், தமிழ் மாநில முஸ்லீம் லீக் தலைவர் ஷேக் தாவூத், தமிழக கட்டடத் தொழிலாளர்கள் பொதுநல மத்திய முன்னேற்ற சங்கத்தின் மாநிலத் தலைவர் நெல்லை மகாலிங்கம், கிறிஸ்தவ மக்கள் கட்சியின் தலைவர் ஐசக், அகில இந்திய தெலுங்கர் முன்னேற்றக் கழகத்தின் நிறுவனத் தலைவர் கட்டபொம்மன் கந்தசாமி ஆகியோர் நேரில் சந்தித்துப் பேசினர்.

அப்போது, ஜெயலலிதா அவர்களிடம் “நீங்கள் அனைவரும் பல்வேறு வேலை பளுவுக்கு இடையில் இங்கேயே தங்கி கூட்டணி வேட்பாளரின் வெற்றிக்காக அயராது தேர்தல் பணியாற்றிக் கொண்டிருப்பதை நான் நன்கு அறிவேன். உங்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன். மீண்டும் நாம் அனைவரும் தேர்தல் வெற்றிப் பொதுக்கூட்டத்தில் சந்திப்போம்” என்றார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக