விரைவு சாலை: மதுரவாயலில் மன்மோகன் சிங் அடிக்கல்

வெளிநாடு வாழ் இந்தியர்கள் மாநாடு, அதிவிரைவு சாலை அடிக்கல் நாட்டு விழா ஆகியவற்றில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மன்மோகன்சிங் நேற்று (ஜனவரி 7) இரவு சென்னை வந்தார். வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான 2 நாள் மாநாடு சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் இன்று (ஜனவரி 8) தொடங்கியது. பிரதமர் மன்மோகன்சிங் விழாவில் கலந்து கொண்டு மாநாட்டை தொடங்கி வைத்தார். அதன் பிறகு அவர் மதுரவாயல் சென்றார்.

சென்னை போர் நினைவு சின்னத்தில் இருந்து மதுரவாயல் வரை ரூ.1655 கோடி செலவில் அமைக்கப்பட இருக்கும் விரைவு சாலைக்கு பிரதமர் மன்மோகன் சிங் அடிக்கல் நாட்டினார். விழாவில் முதல்வர் கருணாநிதி, மத்திய அமைச்சர்கள் டி.ஆர்.பாலு, ஜி.கே.வாசன், கே.எச்.முனியப்பா ஆகியோர் கலந்து கொண்டனர்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக