இந்தியா டுடேவுக்கு எதிராக‌ போராட்ட‌ம்


இட ஒதுக்கீட்டையும், வி.பி,சிங்கையும் கொச்சைப்படுத்தியதாக சொல்லி "இந்தியா டுடே" பத்திரிகைக்கு எதிராக போராட்டம் நடத்தினார்கள் திராவிடர் கழகத்தினர். ம‌யிலாப்பூர் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள இந்தியாடுடே அலுவலகத்தின் முன்பு திராவிடர் கழக இளைஞரணி மாநில துணைச் செயலாளர் தமிழ் சாக்ரடீசு தலைமயில் 50-க்கும் மேற்பட்ட இளைஞரணியினர் "இந்தியா டுடே" பத்திரிகைக்கு எதிராக குரல்கள் எழுப்பி அந்த‌ ப‌த்திரிகையை தீயிட்டு கொளுத்தின‌ர். இந்த போராட்டத்தில் ஈடுபட்டோரைக் கைது செய்து பிற‌கு விடுவித்தது போலீஸ்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக