வள்ளலாரும் பெரியாரும்” நூல் வெளியீட்டு விழா

தனஜோதி பதிப்பகத்தின் சார்பில் மருத்துவர் ஜெய.ராஜமூர்த்தி எழுதிய “வள்ளலாரும் பெரியாரும்” ஒப்பாய்வு நூல் வெளியீட்டு விழா இன்று (டிசம்பர் 11) சென்னை மயிலாப்பூர், இராகசுதா அரங்கில் நடைபெற்றது. அமைச்சர் பொன்முடி ஒப்பாய்வு நூலை வெளியிட பொது நூலகத்துறையின் இயக்குநர் முனைவர் வெ.இரமணி பெற்றுக் கொண்டார்கள்.

விழாவிற்கு தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் செயலாளர் கவிஞர் இளையபாரதி முன்னிலையுரையாற்ற, திரைப்படத் தயாரிப்பாளர் ராஜன், மருத்துவர் ஹூசைன், வாஷிங்டன் கூ.ஞ.சண்முகநாதன், தமிழ் சுவிசேஷ லுத்ரன் திருச்சபையின் செயலாளர் முனைவர் நு.னு. சார்லஸ், சீழ்காழி சிவசிதம்பரம், தமிழக காங்கிரஸ் கட்சியின் பொது செயலாளர் எஸ்.எம். இதயதுல்லா, ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். வழுவூர் ரவி வரவேற்புரையும், நூலாசிரியர் மருத்துவர் ஜெய. ராஜமூர்த்தி நன்றியுரையாற்றினார்கள்.

விழாவில் தமிழ்நாடு தேர்வாணையக்குழுத் தலைவர் ஏ.எம். காசிவிஸ்வநாதன், சட்டமன்ற உறுப்பினர் மு.பெரியசாமி, தேர்வாணையக்குழு உறுப்பினர் முனைவர் டி.லட்சுமணன், அமைச்சர் ஸ்டாலின் மனைவி துர்கா ஆகியோர் கலந்து கொண்டனர்.

நூலாசிரியர் மருத்துவர் ஜெய.ராஜமூர்த்தி தனஜோதி பதிப்பகத்தின் மூலம் “நேசம் விரும்பும் நெருப்புப்பூக்கள்” எனும் கவிதையினையும், “புனிதர் வள்ளலாரின் புரட்சிப்பாதை” எனும் உரைநடை நூலையும், தமிழருவி பதிப்பகத்தின் மூலம் “எனது அம்பறாத்தூணியிலிருந்து” எனும் கவிதை நூலினையும் வெளியிட்டுள்ளார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக