வாஞ்சிநாதனின் கூட்டாளி மகளுக்கு கருணாநிதி நிதியுதவி

ஆஷ் துரையை சுட்டுக்கொன்ற வாஞ்சி நாதனின் கூட்டாளி மகள் கோதையம்மாள் என்பவர் தியாகி பென்ஷனுக்கு போராடிவருவ‌தாக தினகரன் பத்திரிகையில் செய்தி வெளியானது. அவரிடம் இது தொடர்பாக கோப்புகள் எதாவது இருக்கிறதா என்று முதல்வர் கருணாநிதி விசாரிக்க சொன்னார்.ஏற்கனவே இந்த அம்மையாருக்கு அரசின் சார்பில் மாதம் 500 ரூபாய் வழங்கப்பட்டு வந்ததாகவும் இதற்கு முன்பு இருந்த ஆட்சியில் அது ரத்து செய்யப்பட்டு விட்டதாகவும் தெரிந்தது.கோதையம்மாளின் கோரிக்கையை ஏற்று சிறப்பு நேர்வாக கருதி மாதம் 2 ஆயிரம் ரூபாய் ஓய்வூதியமாக வழங்கலாம் என்று முதல்வர் கருணாநிதி உத்தரவு போட்டிருக்கிறார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக