ஜெயலலிதா கொண்டாடிய கிறிஸ்துமஸ்





போயஸ் கார்ட‌னில் இன்று (டிசம்பர் 25) மாலை, ஜெய‌ல‌லிதா கிறிஸ்துமஸ் விழாவைக் கொண்டாடினார்கள்.
விழாவின் முதல் நிகழ்ச்சியாக, ராஜா பிரபாகரன் ஜெபித்து கிறிஸ்துமஸ் விழாவைத் துவக்கி வைத்தார். சர்ச்சில் ஜோசப் வேதப் பகுதியை வாசித்தார். அதைத் தொடர்ந்து, "ஒவ்வொரு ஆத்மாவிற்கும் ஏசு" என்ற பாடகர் குழுவினர் கிறிஸ்துமஸ் சிறப்புப் பாடல்களைப் பாடினார்கள். ஆயர் டாக்டர் சாமுவேல் சுதாகர் முடிவு ஜெபம் நிகழ்த்தினார். தொடர்ந்து, புகழ்மிக்க ஜிங்கிள் பெல்ஸ் பாடல், பாடகர் குழுவினரால் இசைக்கப்பட்டது. இதனை ஜெயலலிதா ரசித்ததோடு, பாடகர் குழுவினருக்கு தமது பாராட்டுதலைத் தெரிவித்துக் கொண்டார்.

அடுத்தபடியாக, கிறிஸ்துமஸ் தாத்தா ஜெயலலிதாவுக்கு கிறிஸ்துமஸ் பரிசை வழங்கினார். அதே போல், நிகழ்ச்சிக்கு வந்திருந்த பேராயர்களும், ஆயர்களும், கிறிஸ்தவ சபை பெருமக்களும், பிரமுகர்களும், ஜெயலலிதாவுக்கு கிறிஸ்துமஸ் பரிசுகளை வழங்கி தங்களது கிறிஸ்துமஸ் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டனர்.

தொடர்ந்து, ஜெயலலிதா, பேராயர் மா. பிரகாஷ் இந்திய கிறிஸ்தவ ஜனநாயகக் கட்சியின் நிறுவனத் தலைவர் டாக்டர் என். கிறிஸ்துதாஸ் மற்றும் இந்திய தேசிய குடியரசுக் கட்சியின் நிறுவனத் தலைவர் பேராசிரியர் டாக்டர் சி. அம்பேத்கர்பிரியன் ஆகியோரது ஏற்பாட்டின்பேரில் வைக்கப்பட்டிருந்த கிறிஸ்துமஸ் கேக்குகளை வெட்டினார். நிறைவாக, ஜெய‌ல‌லிதா , விழாவிற்கு வந்திருந்த பாடகர் குழுவினர் மற்றும் விருந்தினர்கள் அனைவருக்கும் கிறிஸ்துமஸ் கேக்குகளை வழங்கி, கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு நல்வாழ்த்துகளைத் தெரிவித்து தமது மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார்கள்.

இந்நிகழ்ச்சியில், பேராயர் ஞானப்பிரகாசம் பேராயர் ஓனேஷிமஸ் , பேராயர் அருள்தாஸ் ஆகியோரும், இந்திய கிறிஸ்தவ ஜனநாயகக் கட்சி மற்றும் இந்திய தேசிய குடியரசுக் கட்சி ஆகியவற்றின் மாநில, மாவட்ட நிர்வாகிகளும், முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர். அ.தி.மு.க. அமைப்புச் செயலாளர் பி.எச். பாண்டியன், வழக்கறிஞர் பிரிவுச் செயலாளர் பி.எச். மனோஜ் பாண்டியன், சிறுபான்மையினர் நலப் பிரிவுத் தலைவர் ஏ. ஜஸ்டின் செல்வராஜ், மீனவர் பிரிவு இணைச் செயலாளர் ஜெனிபர் சந்திரன், ஜெ.சி.டி. பிரபாகரன் மற்றும் பத்திரிகையாளர் ரபிபெர்னார்ட் ஆகியோரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக