திருமங்கலம்: அ.தி.மு.க‌ வேட்பாள‌ர் ம‌னு தாக்க‌ல்



திருமங்கலம் தொகுதி இடைத் தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் முத்துராமலிங்கம் போட்டியிடுகிறார். அவர் தனது வேட்பு மனுவை இன்று (டிசம்பர் 18) தாக்கல் செய்தார். முத்துராமலிங்கம் வேட்பாளர் என்று ஜெயலலிதா அறிவித்ததுமே அவர் காலையில் வேட்புமனு தாக்கல் செய்தார்.


1996 2001 தி.மு.க. ஆட்சியில் முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ.வாக இருந்தார். தி.மு.க.வின் ஆட்சி முடியும் போது அவர் அதிரடியாக ஜெயலலிதா முன்பு அ.தி.மு.க.வில் சேர்ந்தார். அவரை அ.தி.மு.க.வுக்கு கொண்டு வந்ததில் மறைந்த முன்னாள் சபாநாயகர் காளிமுத்து பெரும் பங்கெடுத்துக் கொண்டார். தா.கிருட்டிணன் கொலை வழக்கு ஆந்திரா சித்தூரில் நடந்த போது அந்த வழக்கில் முத்துராமலிங்கம் அழகிரிக்கு எதிராக சாட்சி சொன்னார். அந்த வழக்கு ஆந்திராவுக்கு மாற்றுவதிலும் முத்துராமலிங்கம் சட்டப் போராட்டம் நடத்தினார். அந்த விசுவாசத்துக்குதான் இப்போது அவருக்கு ஸீட் கிடைத்திருக்கிறது.


தேர்தல் பணிகளை செய்வதற்காக ஒ.பன்னீர்செல்வம் தலைமையில் குழு ஒன்றையும் ஜெயலலிதா நியமித்திருக்கிறார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக